நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த வன்முறை மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய வன்முறையில் உயிரிழந்தவர்களில் ஐந்து சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் அடங்குவதாக அண்மைக்கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இந்த இரு நாள் வன்முறைச் சம்பவங்களில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இந்த மோதல்களில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில், இன்று காலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட நேரடி மோதலைத் தொடர்ந்தே இந்த புதிய வன்முறை வெடித்துள்ளது.
தற்போது சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து சிறைச்சாலையின் நிலைமையை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
