HomeFeatured Newsஇலங்கையில் கைதாகும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்

இலங்கையில் கைதாகும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்

இலங்கையில் ஊழல் ஒழிப்பு, நிதி முறைகேடு மற்றும் கடமை தவறியமைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் பின்னணியில் அண்மையில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள் குறித்த விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது மற்றும் விளக்கமறியல்

முன்னாள் கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான அகில விராஜ் காரியவசம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டு, கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்ற உத்தரவின்படி ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றிய காலத்தில், இவரது ஊழியர் பிரிவுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 4 ஊழியர்களில் மூவரை, தனக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிக்கு அமர்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்செயல் மூலம் அரசுக்கு சுமார் 2.76 மில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு மரண தண்டனை

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றத்திற்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தாக்குதல் நடப்பதற்கு முன்பாக உளவுத்துறை மூலம் துல்லியமான தகவல்கள் அளிக்கப்பட்ட போதிலும், பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்காகவும், கடமை தவறியமைக்காகவும் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்ட போதிலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி வழக்கு மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்ததில் 1.15 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் இவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

2015 தேர்தல் பிரச்சாரத்தின் போது 5.3 கோடி ரூபா அரச நிதியில் கேரம் போர்டுகள் மற்றும் தாயக் கட்டைகளை விநியோகித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தண்டனை வழங்கப்பட்டது.

பிள்ளையான் மீது மேலும் 3 கொலைக் குற்றச்சாட்டுகள்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது மேலும் பல கொலைக் குற்றச்சாட்டுகளைக் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் அவருக்கு எதிரான மொத்தக் கொலைக் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை  உயர்ந்துள்ளது.

இவ்வாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular