HomeFeatured Newsசுவிஸ் 'ஸ்டாட்லர் ரயில்' நிறுவனத்திடம் கப்பம் கோரி சைபர் தாக்குதல்!

சுவிஸ் ‘ஸ்டாட்லர் ரயில்’ நிறுவனத்திடம் கப்பம் கோரி சைபர் தாக்குதல்!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல ரயில் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமானஸ்டாட்லர் ரயில்நிறுவனத்தின் உதிரிபாக விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து திருடப்பட்டத் தரவுகளைத் திரும்ப ஒப்படைக்க CHF10 மில்லியன் சுவிஸ் பிராங்க் கப்பம் கேட்டுஎவரெஸ்ட்என்ற இணையக் குற்றவாளிகள் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.

எனினும், குற்றவாளிகள் கோரிய கப்பத் தொகையை வழங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ள ஸ்டாட்லர் நிறுவனம், இது குறித்து காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

வர்த்தகத் தளம் ஒன்றின் உள்நுழைவுத் தகவல்கள் சமரசம் செய்யப்பட்டதன் மூலம், ஸ்டாட்லர் நிறுவனத்தின் விநியோகஸ்தரின் குறிப்பிட்ட சில தொழில்நுட்பத் தரவுகளை இணையக் குற்றவாளிகள் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளனர்.

ஸ்டாட்லர் நிறுவனத்தின் சொந்த கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் எந்தவித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. அவை வழக்கம்போல இயங்கி வருகின்றன.

இந்தத் தாக்குதலால் ரயில்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி எந்தவித தடங்கலுமின்றி இயல்பாக நடைபெற்று வருகிறது.

திருடப்பட்டத் தரவுகளால் எவ்வித பாதுகாப்பு ஆபத்துகளும் இல்லை என்றும், வாடிக்கையாளர்களின் முக்கியமான தனிப்பட்ட தரவுகள் எதுவும் திருடப்படவில்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஐரோப்பிய உள்கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்துத் துறைகள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், சுவிஸ் நாட்டின் முன்னணி நிறுவனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular