அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க “இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்” மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
இரு நாடுகளின் மதிப்புமிக்க அதிபர்களால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், மத்தியஸ்தர் என்ற ரீதியில் என்னாலும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த அரசாங்கங்களின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது, மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதில் இரு தரப்பிற்கும் உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மேலும் தெரிவிக்கையில், இந்த இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசு உடனடியாக ஹோர்முஸ் நீரிணையை ) மீண்டும் திறக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாடு ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை உடனடியாக வாபஸ் பெறும் என தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடுவதற்கும், தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும், இணை மத்தியஸ்த நாடான கத்தார் நாட்டின் ஆதரவுடன் பாகிஸ்தான் திட்டமிட்டபடி 2026 ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வ விழாவை நடத்தவுள்ளது,” என்றும் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
இறுதியாக, “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முழு பிராந்தியத்திற்கும் சிறந்த புரிதல், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட செழுமைக்கான ஒரு நிலையான அடித்தளமாக அமையட்டும்,” என்று அவர் தனது பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
